ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு 'லுக்அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள ரன்வீர்ஷா என்பவரின் வீட்டில் இருந்து கடந்த 27-ம் தேதி, 89 புராதன சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து கடந்த 30-ம் தேதி தஞ்சாவூர் அருகே திரு வையாறில் உள்ள ரன்வீர்ஷாவின் பழைய அரண்மனை ஒன்றில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவி னர் சோதனை நடத்தி பல சிலை களை கைப்பற்றினர். கடந்த 3-ம் தேதி மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடியில் உள்ள பண்ணை வீடு, தாம்பரம் அருகே குழங்கல்சேரியில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தி நூற்றுக்கணக்கான சிலைகளை கைப்பற்றினர்.
ரன்வீர்ஷாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.இதனால், ரன்வீர்ஷா, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய் துள்ளார்.
இந்நிலையில், ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago
வணிகம்
12 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
சுற்றுலா
5 hours ago
கல்வி
5 hours ago