வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகட்சிகள் ஓரணியில் திரண்டால் மதவாத சக்திகளை முறியடிக்கலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியபின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“சனாதன, பயங்கரவாத சக்திகளை முறியடிக்கும் வகையில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து ‘தேசம் காப்போம்’ மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலினை பங்கேற்க அழைத்துள்ளோம். அவர் பங்கேற்பதாக இசைவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவருக்கு நடந்த அறுவைச்கிச்சைக் குறித்தும் நலம் விசாரித்தோம்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தேசிய தலைவர் ராகுல் காந்தியை அழைத்துள்ளோம். திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக உள்ளிட்ட திமுக தோழமைக்கட்சிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
திமுக காங்கிரஸ் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தோழமைக்கட்சிகளும், மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். அவ்வாறு திரண்டால் மதவாத சக்திகளை ஆட்சிக்கு வராமல் தடுக்க முடியும்.”
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
36 mins ago
சுற்றுச்சூழல்
46 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
41 mins ago
விளையாட்டு
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
5 hours ago