மதுரை நாளிதழ் எரிப்பு வழக்கில் தொடர்புடையவர் தற்கொலை

By செய்திப்பிரிவு

மதுரை நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் தொடர்புடையவர் கமுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பல்லக்கு தெருவைச் சேர்ந்தவர் சிற்பி முருகேசன் மகன் சிற்பி சரவணன்(43). இவருக்கு நாக முத்து என்ற மனைவியும், 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ள னர்.

மதுரையில் உள்ள ஒரு நாளிதழ் அலுவலகம் கடந்த 9.5.2007-ல் எரிக்கப்பட்டது. இதில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இதில் அட்டாக் பாண்டி உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிற்பி சரவணனும் ஒருவர். மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பின் சரவணன் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சிற்பி சரவணன் மீதும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பப் பிரச்சினையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கமுதி போலீஸார் விசாரிக்கின்றனர்்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்