கோவையில் பாலியல் புகாரில் சிக்கிய மகளிர் விடுதி உரிமையாளர் நெல்லையில் மரணம்: தற்கொலையா என போலீஸ் விசாரணை

By செய்திப்பிரிவு

கோயம்புத்தூர் சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன். பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் தனியார் மகளிர் விடுதி நடத்திவந்தார். இங்கு  தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த புனிதா (32) என்பவர் வார்டனாக பணியாற்றினார். இந்த விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகார்களின் பேரில், போலீஸார் விசாரணை நடத்தி ஜெகநாதன், புனிதா ஆகிய இருவர் மீதும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, இருவரும் தலைமறைவாகினர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த சிவலார்குளத்திலுள்ள மாரியப்பன் என்பவரது தோட்டக் கிணற்றில் ஜெகநாதன் சடலம் கிடப்பது தெரியவந்தது. ஆலங்குளம் போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் விசாரணை நடத்தியதில் ஜெக நாதன் அளவுக்கு அதிகமாக மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தலைமறைவாக இருந்த ஜெகநாதன், போலீஸாரிடம் சிக்காமல் இருக்கவும், நீதிமன்றத்தில் சரண டையவும் திட்டமிட்டிருந்தார். இதற்காக கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை அணுகியுள்ளார். அப்போது தனக்கு தெரிந்த திருநெல்வேலி வழக்கறிஞரை அணுகுமாறும், அவர் மூலம் திருநெல்வேலி நீதி மன்றத்தில் சரணடையுமாறும் அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெகநாதன், குற்றாலத்தில் தங்கியிருந்தார்.

திருநெல்வேலி வழக்கறிஞரிடம் தொடர்புகொண்டபோது, நீதிமன்றத்தில் சரணடையும் வரை ஆலங்குளத்தை அடுத்த சிவலார்குளத் தில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருக்குமாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

இதன்படி அங்கு சென்று தங்கியிருந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கி றார். மது போதையில் இருக்கும் போதுதான் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே, ஜெகநாதன் எழுதிய கடிதம் போலீஸாரிடம் சிக்கியுள்ளது. அதில், தனது வளர்ச்சி பிடிக் காமல் சிலர் சூழ்ச்சி செய்து தன்னை பாலியல் வழக்கில் சிக்க வைத்து விட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்கிறேன் என எழுதப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே இந்தக் கடிதம் அவர் எழுதியதுதானா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

க்ரைம்

14 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

38 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்