உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மூச்சுத்திணறல் பிரச்சினை காரணமாக தா.பாண்டியன் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார்.
அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், காமராஜ், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் சென்றனர்.
அதேபோன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று தா.பாண்டியனிடம் நலம் விசாரித்தனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
22 mins ago
இந்தியா
51 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
9 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
விளையாட்டு
11 hours ago