தா.பாண்டியனை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி

By செய்திப்பிரிவு

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மூச்சுத்திணறல் பிரச்சினை காரணமாக தா.பாண்டியன் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார்.

அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், காமராஜ், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் சென்றனர்.

அதேபோன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று தா.பாண்டியனிடம் நலம் விசாரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

22 mins ago

இந்தியா

51 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்