தருமபுரியில் இரட்டை டம்ளர் முறை: 6 பேர் கைது

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் இரட்டை டம்ளர் முறையை கடைபிடித்த கடை உரிமையாளர்கள் 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் டீக்கடை மற்றும் ஓட்டல்களில் இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கப்படுவதாக மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கார்க்குக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் மாவட்டம் முழுவதும் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், பென்னாகரம் வட்டம் தாசம்பட்டியில் டீ மற்றும் டிபன் கடை நடத்தும் சாந்தி (30), பளிஞ்சார அள்ளியில் டீக்கடை நடத்தும் சிவலிங்கம் (எ) குடியன் (50), பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி அருகேயுள்ள நம்மாண்ட அள்ளி பகுதியில் டீக்கடைகள் வைத்திருக்கும் வீரபத்திரன் (55), முருகன் (50), தேவகி (40), கிட்டம்பட்டி சித்தையன் (50) ஆகியோர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே 6 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்