ஆலந்தூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இளைஞர் பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரித்துக் கொன்ற விவகாரத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததும் அல்லாமல் வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதால் பணிப்பெண், தன் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
சென்னை ஆலந்தூர் எம்.கே.என் சாலை 2-வது தெருவில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டினுள் தீப்பிடித்து எரிவதாக வந்த புகாரின் பேரில் போலீஸார் அங்குசென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
வீட்டினுள்ளே எரிந்து கரிக்கட்டையாக மனித உடல் ஒன்று கிடந்தது. கருகிய நிலையில் கை, கால்கள் கம்பியால் கட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்தது அந்த உடல்.
உடனடியாக போலீஸார் அது யாரென்று விசாரித்தபோது, வீட்டின் உரிமையாளரான முகமது சுல்தான் (40) என்பது தெரியவந்தது. கடந்த இரண்டரை வருடங்களாக சுல்தான் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். பண்ருட்டியைச் சேர்ந்த அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும், மும்பையிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை மொத்தமாக வாங்கி அண்ணா சாலை ரிச்சி தெருவில் வியாபாரம் செய்து வந்தார்.
அவரது கைகால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்டதால் உடல் முழுவதும் உரு தெரியாமல் போனது. முகமது சுல்தான் எதற்காகக் கொல்லப்பட்டார், தொழில் தகராறா? என்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
சுல்தான் வீட்டுக்கு அடிக்கடி பெண்கள் தனியாக வந்து தங்கிச் செல்வதாகக் கூறுகின்றனர். அதனால் பெண் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாமோ? என்கிற ரீதியிலும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
முகமது சுல்தானைத் தாக்கி இரும்புக் கம்பியால் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததால், அவருக்கு அறிமுகமான யாராவது வீட்டுக்குள் வந்திருக்கலாம், வாக்குவாதம் செய்து முகமது சுல்தானைத் தாக்கி மயக்கமடையச் செய்து, பின்னர் இரும்புக் கம்பியால் கை, கால்களைக் கட்டி எரித்திருக்கலாம் என்று போலீஸார் கருதினர்.
அப்போது முகமது சுல்தானின் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் குறித்த தகவல் கிடைத்தது. அவரது வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டாக வேலை செய்து வந்த பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். அவரை அழைத்து போலீஸார் கொலை சம்பவம் குறித்துக் கேட்டனர். அப்போது பாத்திமாவுக்கு தானும் தனது காதலரும் சேர்ந்து முகமது சுல்தானைக் கொன்றதாகத் தெரிவித்தார்.
போலீஸார் முகமது சுல்தானைக் கொன்றதற்கான காரணத்தைக் கேட்டபோது பணிப்பெண் கூறிய காரணம் திடுக்கிட வைத்தது. முகமது சுலதான் வீட்டில் தான் பணிப்பெண்ணாக பணியாற்றிய சில மாதங்களிலேயே தனக்கு சாக்லெட்டில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததோடு, வீடியோவும் எடுத்து வைத்து மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
பாத்திமாவுக்கு இமான் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் முகமது சுல்தான் தொடர்ந்து பாத்திமாவை மிரட்டி வந்துள்ளார்.
இதனால் முகமது சுல்தானைச் சந்தித்து தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம், அந்த வீடியோவை தந்துவிடுங்கள் எங்கள் வாழ்க்கையில் இனி குறுக்கிடாதீர்கள் என்று கேட்க பாத்திமாவும், அவரது காதலர் இமானும் கடந்த 2 நாட்களுக்கு முன் முகமது சுல்தான் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
முகமது சுல்தான் அவர்களை அலட்சியமாகப் பேசி மிரட்டியுள்ளார். இதனால் வாக்குவாதம் அதிகமாகி முகமது சுல்தான் கத்தியை வைத்து இமானை குத்த அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இமானும், பாத்திமாவும் கத்தியால் முகமது சுல்தானைக் கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்த, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றுவிட்டனர். பின்னர் மதியத்துக்கு மேல் மீண்டும் வீட்டுக்கு வந்த அவர்கள் கைகால்களை இரும்புக் கம்பியால் கட்டி பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து இமான் எங்கே இருக்கிறார் என்று விசாரித்தபோது அவர் ராமேஸ்வரம் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
உடனடியாக ராமேஸ்வரம் சென்ற போலீஸார் இமானைக் கைது செய்தனர். முறையற்ற வாழ்க்கை ஒரு உயிரைப் பறித்ததும் அல்லாமல், இளம் காதலர்களையும் குற்றவாளியாக்கியுள்ளது.
'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
வணிகம்
16 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
46 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
57 mins ago
வாழ்வியல்
48 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago