‘தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், ஜப்பான் அழைத்துச் செல்லப்படுவார்கள்’ என்று சென்னையில் உள்ள ஜப்பான் கலாச்சார மையம் அறிவித்துள்ளது.
ஜப்பான் கலாச்சார மையமான எபிகே-எஒடிஎஸ் டூசோகை, திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பேச்சுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாகத் தமிழ்ப் பேச்சுப் போட்டி சென்னையில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு, சிபிஎஸ்சி, மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கிலப் பேச்சு போட்டி, அடுத்த மாதம் 13-ம் தேதி நடைபெற உள்ளது. மூன்று பிரிவுகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், இரண்டு வார காலம் இலவசமாக ஜப்பான் நாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
விளையாட்டு
7 mins ago
இணைப்பிதழ்கள்
33 mins ago
தமிழகம்
43 mins ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago