சென்னையில் ரேஸில் ஈடுபட்ட 19 மோட்டார் சைக்கிளை போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உட்பட பல்வேறு சாலைகளில் இளைஞர்கள் சிலர் அடிக்கடி பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை பிடிக்க போக்குவரத்து போலீஸார் தனிப்படை அமைத்தனர். தனிப்படை போலீஸார் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 1 மணிக்கு அடையார் திரு.வி.க பாலம் அருகே இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக ஒன்றன்பின் ஒன்றாக விரைந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடமிருந்து 19 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். தேவைப்பட்டால் கைது செய்வோம் என போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
5 hours ago
உலகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
வேலை வாய்ப்பு
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago