பசியில்லா உலகம் படைப்பதில் குடும்ப விவசாய முறையின் பங்களிப்பு குறித்த ஆசிய பசிபிக் மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 7 நாடுகளின் வேளாண்மை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் அஜய் பரிடா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
மக்கள் அனைவருக்கும் தேவையான நுண்ணூட்டச் சத்துள்ள உணவுகளை வழங்கு வதற்கு குடும்ப விவசாய முறை முக்கிய பங்காற்றுகிறது.
இந்த சூழலில் குடும்ப விவசாயம் பற்றிய ஆசிய பசிபிக் நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு சென்னையில் உள்ள எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய வேளாண்மை அமைச்சர் ராதா மோகன் சிங் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் இந்தியா, பூடான், இந்தோனேசியா, மியான்மர், மாலத்தீவு உள்பட 7 நாடுகளின் வேளாண்மை அமைச்சர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
52 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago