அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடை

By செய்திப்பிரிவு

அரசு பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ -மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய நிறத்தில் சீருடைகள் அறிமுகப் படுத்தப்படுகின்றன.

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு, இலவச சீருடைகள் லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிறத்தில் வழங்கப்படுகின்றன. இதே நிறத்திலான சீருடைகளை 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் சொந்த செலவில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆதிதிராவிடர் உள்ளிட்ட நலத்துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை வரும் கல்வி ஆண்டில் 9, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி சீருடையை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல் நிற பேண்டும், இளஞ்சிவப்பு கோடிட்ட மேல் சட்டையும் மாணவிகளுக்கு சுடிதாருடன் கூடிய சாம்பல் நிற கோட்டும் சீருடையாகிறது. அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கரு நீல பேண்டும், கருநீல நிற கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு சுடிதாருடன் கூடிய கருநீல கோட்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. 9 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த செலவில் சீருடைகளை வாங்கிக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்