நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் 7 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த நபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அமிர்தா நகர் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்தியுள்ளார். சிறுமி கதறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து அச்சிறுமியைத் தேடியுள்ளனர். அப்போது, அருகில் உள்ள முட்புதருக்குள் அந்த சிறுமியை ஒரு இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில், முட்புதரில் இருந்து குழந்தையுடன் ஓடும் போது அந்நபரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர். இதையடுத்து அந்நபரை சரமாரியாகத் தாக்கி மேலப்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்நபரை கைது செய்து போலீஸார் விசாரித்ததில், அவர் பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஜஸ்டின் (26) என்பது தெரியவந்தது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தொழில்நுட்பம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago