தொழில் போட்டியில் சாராயத்தில் விஷம் கலந்து 13 பேரை கொலை செய்த 5 பேருக்கு தூக்கு தண்டனை: திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

சாராயத்தில் விஷம் கலந்து 13 பேரை கொலை செய்த வழ்க்கில் 5 பேருக்கு, தூக்கு தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட் டம் கலசப்பாக்கம் அடுத்த படியம்பட்டு கிராமத்தில் வசிப்பவர்கள் தில்லைக்கண்ணு(47), காமாட்சி, சாந்தி. இவர்கள் மூவரும் சாராய வியாபாரிகள். இவர்களில், தில்லைக்கண்ணு மற்றும் காமாட்சி இடையே சாராயம் காய்ச்சுவ தில் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நம்மியந்தல் வடகரை பகுதியில் வசிக்கும் தங்களது கூட்டாளி ஜெயபாலிடம்(23) தில்லைக்கண்ணு மற்றும் அவரது மகன் உதயகுமார்(23) ஆகியோர் தெரிவித்தனர். இதனையடுத்து, ஜெயபால் தலைமையில் சதித் திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி, ஜெய பால் மற்றும் மேல்சோழன்குப்பம் கிராமத்தில் வசிக்கும் முருகன்(26), வடகரை பகுதியில் வசிக்கும் காளியப்பன்(23) ஆகியோர் கடந்த 23-05-2000-ல் காமாட்சி வீட்டுக்குச் சென்று, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய கேனில் விஷம் கலந்தனர்.

இதுதெரியாமல் கேனில் இருந்த சாராயத்தை காமாட்சி விற்பனை செய்துள்ளார். அதனை பருகிய படியம்பட்டு மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பிச்சைக்காரன், காட்டுராஜா, துரைக்கண்ணு, அழகேசன், பொன்னுரங்கம், முனுசாமி, லட்சுமணன், பரசுராமன், வள்ளியம்மாள், பெரியபையன், மண்ணு கவுண்டர், பஞ்சாட்சரம், மற்றொரு துரைக்கண்ணு ஆகிய 13 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கடந்த 2000-ம் ஆண்டு இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்றப்பட்டது. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி சாராயத்தில் விஷம் கலந்த ஜெயபால், முருகன், காளியப்பன் மற்றும் சதித்திட்டம் தீட்டிய தில்லைக்கண்ணு, உதயகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்படி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஜெயபால் உட்பட 5 பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதி மகிழேந்தி தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறை பாதுகாப்புடன் அழைத் துச் செல்லப்பட்டு 5 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

31 mins ago

கருத்துப் பேழை

24 mins ago

கருத்துப் பேழை

32 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்