‘எதை எதிர்பார்த்து தமிழக மக்களைச் சீண்டுகிறார்கள்?’ என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்துள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், துணைவேந்தர் நியமனம் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் இதை விமர்சனம் செய்துள்ளார். “கர்நாடகத்தில் இருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய, மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத் தேவையில்லை என்று எண்ணிவிட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்து செய்யப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 mins ago
வணிகம்
30 mins ago
இந்தியா
32 mins ago
சினிமா
38 mins ago
ஓடிடி களம்
1 hour ago
கல்வி
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago