மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட சின்னதுரைக்கு பதிலாக ஏ.கே.செல்வராஜ் புதிய வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.
இது தவிர, அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பதவியில் இருந்தும் சின்னத்துரை நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதிமுக சார்பில் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கட்ந்த 23-ஆம் தேதியன்று, அதிமுக ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி,
1. எஸ்.முத்துக்கருப்பன் (நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர்)
2. என்.சின்னத்துரை (இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர்)
3. எல்.சசிகலா புஷ்பா (மகளிர் அணிச் செயலாளர்)
4. விஜிலா சத்யானந்த் (நெல்லை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்) ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட சின்னதுரை திடீரென இன்று நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago