பேரணாம்பட்டு அருகே காதலன் வீட்டின் முன்பு பெண் தர்ணா

By செய்திப்பிரிவு

காதலன் வீட்டு முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (30). இவரது நண்பர் கணேஷ் (32). இவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நண்பரது கம்ப்யூட்டர் சென்டரில் வேலைக்குச் சென்ற சின்னதுரை, அவரது வீட்டிலேயே தங்கினார். அப்போது, கணேஷ் மனைவி உஷாவுடன் (25), சின்னதுரைக்கு கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த கணேஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தனது 2 மகன் களுடன் உஷா கிருஷ்ணகிரியில் சின்னதுரையுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சின்னதுரை, தனது பெற்றோரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், அவர் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு திரும்ப வில் லை.

இதற்கிடையே, சின்னதுரைக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வருவதாக உஷா கேள்விப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த உஷா நேற்று காலை பல்லலகுப்பம் கிராமத்துக்கு வந்து சின்னதுரை சந்திக்க முயன்றார். அவரது முயற்சி பலன் அளிக்காததால், சின்னதுரை வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த மேல்பட்டி காவல் துறையினர் வந்து உஷாவை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, சின்னதுரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

27 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்