சென்னை விமான நிலையத்தில் ரூ.47.15 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது சினேகா ராஜ்குமார் கரனி என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்தப் பெண் ரூ.23.75 லட்சம் மதிப்புள்ள 782 கிராம் எடை கொண்ட தங்க வளையல்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்க வளையல்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விமானத்தில் துபாயில் இருந்து சென்னை வந்த கமல் ஜீட் சிங் என்பவரை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 499 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து வந்த லியாகத் அலிகான் மொய்தீன் கான் என்பவரை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர் ரூ.8.4 லட்சம் மதிப்புள்ள 276 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
24 mins ago
சினிமா
40 mins ago
சினிமா
49 mins ago
சினிமா
52 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
50 mins ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago