மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்

By செய்திப்பிரிவு

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை டிவிஎஸ் நகரில் வசிக்கிறார். இவர் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய ஒருவர் உட்பட 3 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தேவையற்ற செலவினங்களைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையொட்டி முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கான தேவையற்ற போலீஸ் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளலாம் என மாநில டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மதுரையில் அழகிரிக்கான பாதுகாப்பில் இருந்த போலீஸார் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் மட்டுமே பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்