திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில், காகிதப் பூ மணக்காது எனக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மதுரையில் கமல்ஹாசன், நான் காகிதப் பூ அல்ல; விதை என்றார்.
மதுரை ஒத்தக்கடை அருகே இன்று (பிப். 21) மாலை நடக்கும் கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி பெயர், கொடியை அறிவிக்கிறார்.
முன்னதாக, நேற்று பிற்பகல் விமானம் மூலம் மதுரை வந்த கமல் பைபாஸ் ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். பின்னர் மாலை 5 மணிக்கு அவர் ராமேசுவரம் புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அவரிடம், திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் காகிதப் பூ மணக்காது என, உங்களைக் குறிப்பிட்டதுபோல உள்ளதே என கேள்வி எழுப்பினர்.
பூவாகி மணப்பேன்
செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘என்னைப் பற்றி அவர் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், நான் காகிதப் பூ அல்ல; விதை. முளைத்து, பூவாகி, மணப்பேன். எனது கட்சியின் கொள்கைகளுக்கு உடன்படும் பட்சத்தில், பிற கட்சிகளுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் யோசிப்பேன்’ என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
7 mins ago
இந்தியா
36 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
9 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
விளையாட்டு
11 hours ago