பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம்

By செய்திப்பிரிவு

எண்ணூர் யார்டு அருகே ரயில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் இன்றும், நாளையும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு மதியம் 12.20, 1.25 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட் வளாகத்துக்கு காலை 11.20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.30, 10.25 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில்கள் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 9.50, 10.50 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் மின்சார ரயில்கள் எண்ணூரில் இருந்து இயக்கப்படும். சூளூர்பேட்டை யில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 10, 11.15 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

பித்ராகுண்டா - சென்னை சென்ட்ரல் (57240) பயணிகள் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் - கூடூர் பயணிகள் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்கப் படும். எண்ணூரில் இருந்து மூர்மார்க்கெட் வளாகத்துக்கு காலை 11.15 மணிக்கு பயணி கள் சிறப்பு ரயில் இயக்கப் படும்.

சென்னை கடற்கரை – ராயபுரம் இடையே பராமரிப்புப் பணிகள் இன்றும், நாளையும் நடக்கவுள்ளதால், சில மின்சார ரயில்கள் மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்படுகின்றன. திருவள்ளூரில் இருந்து காலை 11.05, ஆவடியில் இருந்து மதியம் 12.10, கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற் கரைக்கு வரவேண்டிய மின்சார ரயில்கள் மூர்மார்க்கெட் வளாகத்தை வந்து அடையும்.

திருவள்ளூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 1.40 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் மின்சார ரயில் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே 1.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து திருத்தணிக்கு மதியம் 12.10, அரக்கோணத்துக்கு மதியம் 2.25, சூளூர்பேட்டைக்கு மதியம் 2.40 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில்கள் மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து இயக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்