ஆவின் பால் கிடைக்கவில்லையா? - புகார் அளிக்க இலவச எண்

By செய்திப்பிரிவு

கனமழையால் ஆவின் பால் பாக்கெட்கள் கிடைக்காவிட்டால் வாடிக்கையாளர்கள், 1800 425 3300 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015 டிசம்பரில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தின்போது சென்னையில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், பல இடங்களில் பால் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஆவின் நிறுவனம் சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மழையால் ஆவின் பால் விநியோகம் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய சென்னையில் மட்டும் 8 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்பின் காரணமாக ஆவின் பால் விநியோகம் தடைபட்டாலோ, கிடைக்காமல் போனாலோ 1800 425 3300 என்ற இலவச தொலைபேசி எண்ணில் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம்.

ஏதேனும், இடர்ப்பாடு ஏற்பட்டாலும்கூட சென்னை மக்களுக்கு பால் தடைபடாமல் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான அளவு பால் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பிற மாவட்டங்களிலும் கொள்முதல், விநியோகம் தடைபடாமல் இருக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்குமாறு ஆவின் நிர்வாக இயக்குநர் சி.காமராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

ஜோதிடம்

43 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்