கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 700 சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 29-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும். தீபத் திருவிழாவை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்களின் வசதிக்காக...
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்தும் அரசு போக்குவரத்துக் கழகங் கள் இந்த ஆண்டு மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளன. இதில், சென்னையில் இருந்து மட்டுமே சுமார் 700 சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்கு வரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பக்தர்களின் வசதிக்காக இந்த ஆண்டும் தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப் புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை, சேலம், புதுச்சேரி, வேலூர், காஞ்சிபுரம், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, நாகப்பட்டினம், விழுப்புரம் உட் பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்த ஆண்டு 2,000-க் கும் மேற்பட்ட சிறப்பு பேருந்து கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படவுள்ளன. இதில், சென்னை கோயம்பேட்டில் இருந்து சுமார் 700 சிறப்புப் பேருந்துகள் திருவண்ணா மலைக்கு இயக்கப்படும்.
தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து கணிசமான பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், இறுதிகட்ட அறிவிப்பு இன்னும் ஓரிருநாட்களில் வெளியிடப்படும். கனமழை இல்லாமல் இருந்தால், அதிக அள வில் மக்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
2 mins ago
தமிழகம்
27 mins ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
விளையாட்டு
12 hours ago