பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் காலை 9.30 மணி முதல் மாலை 5.40 வரை 50 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கடம்பத்தூர், அரக்கோணம், திருத்தணி செல்லும் புறநகர் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளன. மாற்றுப் பாதையில் செல்லும் புறநகர் ரயில்கள் பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காலை 9.10 மணிக்கு மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் (எம்எம்சி) – திருவள்ளூர் வரை செல்லும் புறநகர் ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதுபோல காலை 9.25 மணிக்கு சென்ட்ரல் – ஆவடி, 9.30 மணிக்கு சென்ட்ரல் – ஆவடி, 9.45 மணிக்கு சென்ட்ரல் – திருவள்ளூர், 9.45 மணிக்கு சென்னை கடற்கரை – திருவள்ளூர், 10.05 மணிக்கு கடற்கரை – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், 10.15 மணிக்கு சென்ட்ரல் - ஆவடி, 10.45 மணிக்கு சென்ட்ரல் – ஆவடி செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
11.05 மணிக்கு கடற்கரை – ஆவடி, 11.30 மணிக்கு சென்ட்ரல் – திருவள்ளூர், 12.15 மணிக்கு சென்ட்ரல்- திருவள்ளூர், 12.25 மணிக்கு சென்ட்ரல் – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், 12.35 மணிக்கு சென்ட்ரல் – ஆவடி, பிற்பகல் 1.05 சென்ட்ரல் – மிலிட்டரி சைடிங், 1.05 மணிக்கு கடற்கரை – திருவள்ளூர், 1.50 மணிக்கு கடற்கரை – மிலிட்டரி சைடிங், 2 மணிக்கு சென்ட்ரல் – திருவள்ளூர், 2.20 மணிக்கு சென்ட்ரல் – திருவள்ளூர், 3.15 மணிக்கு சென்ட்ரல் – மிலிட்டரி சைடிங், 3.40 மணிக்கு சென்ட்ரல் – திருவள்ளூர், 3.50 மணிக்கு சென்ட்ரல் – ஆவடி, 4.10 மணிக்கு சென்ட்ரல் – மிலிட்டரி சைடிங், 4.30, 5.00, 5.25 மணிக்கு சென்ட்ரல் – திருவள்ளூர் வரை செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
காலை 9.10 மணிக்கு ஆவடி – சென்ட்ரல், 9.10 மணிக்கு திருவள்ளூர் – சென்ட்ரல், 9.25 மணிக்கு திருவள்ளூர் – சென்ட்ரல், 9.50 மணிக்கு ஆவடி – சென்ட்ரல், 11.05 ஆவடி – சென்ட்ரல், 11.05 மணிக்கு திருவள்ளூர் – சென்னை கடற்கரை, 11.25 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – சென்ட்ரல், 11.25 மணிக்கு திருவள்ளூர் – கடற்கரை, பகல் 12 மணிக்கு திருவள்ளூர் – சென்ட்ரல், 12.10 மணிக்கு ஆவடி – கடற்கரை, 1.25 மணிக்கு ஆவடி – சென்ட்ரல், 1.35 மணிக்கு மிலிட்டரி சைடிங் – சென்ட்ரல், 1.40 மணிக்கு திருவள்ளூர் – கடற்கரை செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
பகல் 2.15 மணிக்கு மிலிட்டரி சைடிங் – சென்ட்ரல், 2.40 மணிக்கு ஆவடி – கடற்கரை, 2.45 மணிக்கு திருவள்ளூர் – சென்ட்ரல், 3.10 மணிக்கு மிலிட்டரி சைடிங் – சென்ட்ரல், 3.40, 4.05 மணிக்கு திருவள்ளூர் – சென்ட்ரல், 4.25 மணிக்கு மிலிட்டரி சைடிங் – சென்ட்ரல், 4.40 மணிக்கு ஆவடி – கடற்கரை, 4.45, 5.00 மணிக்கு திருவள்ளூர் – சென்ட்ரல், மாலை 5.10 மணிக்கு ஆவடி – சென்ட்ரல், 5.20 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – சென்ட்ரல் வரை செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரட்டூரில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடப்பதால் இன்று ஒருநாள் மட்டும் இந்த மார்க்கத்தில் ஏராளமான புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரயில் தண்டவாளத்தை அகற்றிவிட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சிமெண்ட் பாளங்களைக் கொண்டு உடனடியாக சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு திருவள்ளூர், ஆவடி மார்க்கத்தில் இருந்து இன்று சென்னை சென்ட்ரலுக்குப் போய் ரயிலைப் பிடிக்க இருப்பவர்களும், குறித்த நேரத்தில் முக்கிய நிகழ்வுகளுக்காக சென்னை செல்பவர்களும் அதற்கேற்ப தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக் கொள்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago