ரூ.4.16 லட்சம் மோசடி: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது வாலிபர் புகார்

By செய்திப்பிரிவு

ரூ.4.16 லட்சம் மோசடி செய்ததாக சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸில் வாலிபர் ஒருவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளித்ததை அடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை புது வண்ணாரப்பேட்டை, அன்னை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் தயாநிதி(32), இவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பலரையும் சென்று பார்த்துள்ளார். நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சினிமாவில் நடிக்க வைப்பதாக தெரிந்துக்கொண்டு 2015-ம் வருடம் அவரை அணுகியுள்ளார். தயாநிதியிடம் பணத்தைப் பெற்ற பவர் ஸ்டார் சீனிவாசன் பின்னர் படத்திலும் நடிக்க சான்ஸ் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தயாநிதி, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின்  பண மோசடி பற்றி வண்ணாரப்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரில் ”சினிமாவில் நடிக்க வைக்க பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ 4,16,000 வாங்கியதாகவும், ஆனால்  சினிமாவில் இதுவரை நடிக்க வாய்ப்பு வாங்கித் தரவில்லை என்றும், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி  கேட்டால் தரவில்லை என்றும், அவரை அழைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறும், தனது பணத்தை பெற்றுத் தருமாறும்” கூறியுள்ளார். புகாரைப்பெற்ற போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்