சோமங்கலம் - சேத்துப்பட்டு இணைப்பு சாலை அமைக்கப்பட்ட ஒரே மாதத்தில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு பழுதடைந்ததால் மக்கள் அவதியடைந் துள்ளனர்.
குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமங்கலம் கிராமத்தையும் சேத்துப்பட்டு கிராமத்தையும் இணைக்கும் முக்கிய சாலை சோமங்கலம் சேத்துப்பட்டு இணைப்புச்சாலை. இச்சாலை கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் இச்சாலை புதுப்பிக்கப்பட்டது. இதனால் இச்சாலையை பயன் படுத்தும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், இச்சாலை சீரமைக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு உள்ளாகவே பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு பழுதடைந்துள்ளதால் இச்சாலையை பயன் படுத்தும் வாகன ஓட்டுநர்களும், மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். பள்ளங்களை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள் ளனர்.
இதுகுறித்து ஒன்றிய பொறியாளர் வசுமதி கூறும்போது, “சோமங்கலம் - சேத்துப்பட்டு இணைப்பு சாலையில் ஏற்பட்டுள்ள பழுதை சீர்படுத்த ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்பட்ட பிறகு தான் நிதி வழங்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
வணிகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
க்ரைம்
9 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
க்ரைம்
10 hours ago
இந்தியா
10 hours ago