ஆர்.ராகவன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

By செய்திப்பிரிவு

தினமலர் நாளிதழ் பங்குதாரர் மற்றும் திருச்சி, வேலூர் பதிப்புகளின் ஆசிரியருமான ஆர்.ராகவன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

தினமலர் நாளிதழின் பங்குதாரரும், திருச்சி மற்றும் வேலூர் தினமலர் பதிப்புகளின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான ஆர். ராகவன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

ஊடக துறைக்கு பேரிழப்பு

தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி. ராமசுப்பையரின் மகனான ஆர். ராகவன், தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தினமலர் நாளிதழின் விற்பனையை அதிகரிக்கச் செய்தார்.

பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர். கடின உழைப்பாளியும், அனைவரிடமும் எளிமையாகப் பழகக்கூடிய பண்பாளருமான ஆர். ராகவன் மறைவு பத்திரிகைத் துறைக்கு பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்