ஒடிசாவில் கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது தற்போது மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. காலை (வியாழக்கிழமை) 8.30 மணி நிலவரப்படி, ஒடிசா மாநிலம் பூரியிலிருந்து 340 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டு இருந்தது. இந்த காற்றழுத்தம் மணிக்கு 11 கிமீ வேகத்தில் ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. இது வெள்ளிக்கிழமை காலை, ஒடிசா மாநிலம் பூரி மற்றும் சந்த்பலி ஆகிய கடலோரப் பகுதிகளுக்கு இடையே கரையை கடந்தது. அதன் பின்னர், அடுத்த 18 மணி நேரத்தில் இந்த காற்றழுத்தம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
அதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
இந்தியா
23 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago