சுவிட்சர்லாந்தை சேர்ந்த வங்கி கிரெடிட் சூயிஸ். உலகின் மிகப் பெரிய வங்கிகளில் இதுவும் ஒன்று. தற்போதுஇந்த வங்கி ஊடகங்களில் மிகவும் பரபரப்பான பேசு பொருளாகி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகசூயிஸ் வங்கி பங்குகளில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டு வருகிறது. 2008-ல் லேமன் பிரதர்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விளைவாக உலகமே பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. கிரெடிட் சூயிஸ் விவகாரத்திலும் அதைப் போலவே பின்விளைவுகள் ஏற்படலாம் என்பது பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
கிரெடிட் சூயிஸ் தற்போது 50-க்கும் மேற்பட்டநாடுகளில் செயல்பட்டு வருகிறது. 22.5 பில்லியன் டாலர் ஆண்டு வருவாயை கொண்டிருக்கும், இந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு இதன் நிர்வாகத்தின் கீழ் 1.1 ட்ரில்லியன் டாலர். இந்த வங்கி கடந்த 7 காலாண்டுகளில் 5 காலாண்டுகளுக்கு நஷ்ட கணக்கை காட்டியுள்ளது. 50,000 ஊழியர்கள் பணிபுரிந்த இந்த வங்கியில் சமீபத்தில் 5,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு மேலும் பல திறமையான ஊழியர்கள் வங்கியிலிருந்து வெளியேறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago