டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடி நிகழ்வுகள் நம் நாட்டில் சமீபத்தில் அதிகரித்துள்ளது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அனைவரும் வங்கி பரிவர்த்தனை மோசடியால் ஏமாறுகின்றனர். இந்தியா எவ்வளவு வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகிறதோ, அதற்கு ஏற்ப புதிய புதிய மோசடிகளும் உருவாகி வருகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனை மிக முக்கியமானதாக மாறி இருக்கும் சூழலில், டிஜிட்டல் பரிவர்த்தனை சார்ந்து நிகழும் மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ‘ராஜுவும் 40 திருடர்களும்’ என்ற தலைப்பில் ஒரு சிறிய கையேட்டை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை சார்ந்து எந்தெந்த விதங்களில் மோசடிகள் மேற்கொள்ளப்படுகின்றன, மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பதைச் சாமானியர்களுக்கும் புரியும் வகையில் காமிக்ஸ் கதை வடிவில் 40அத்தியாயங்களாக இந்தச் சிறு கையேடு உருவாக்கப்பட்டிருக்கிறது. 40 அத்தியாயங்களில் 40வகையான மோசடிகள் விளக்கப்பட்டுள்ளன.
நம்மில் ஒருவராக ராஜு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நவீன மோசடி பேர்வழிகளால் அவர் எப்படி மோசடி செய்யப்படுகிறார் என்பது விளக்கப்படுகிறது. அத்தகைய மோசடித் தருணம் நமக்கு ஏற்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை ஒவ்வொரு மோசடிக் கதையின் கீழும் ரிசர்வ் வங்கி நமக்கு கூறுகிறது. இந்தச் சிறு கையேட்டின் முக்கியத்துவம் என்னவென்றால், நாம் பரவலாக அறிந்த மோசடிகள் குறித்து மட்டுமல்ல, இன்னும் பொதுத்தளத்தில் பரவலாக அறியப்படாத நவீன நூதன மோசடிகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு.. ராஜு கடை வைத்திருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
உலகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago