ஒவ்வோர் ஆண்டும் டெல்லியின் பெயர் ஓர் இழிபுகழுக்காகத் தவறாது செய்திகளில் அடிப்பட்டுவிடும். இப்போதும் அப்படித்தான் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. காற்று மாசு என்றாலேயே டெல்லி என்றாகிவிட்டது. காற்று மாசின் அளவைக் கணக்கிட ஒரு தரக் குறியீடு இருக்கிறது. அதை AQI (Air Quality Index) என்பர். இது 300 என்ற அளவுக்கு மேல் சென்றால் அபாய நிலை. டெல்லியில் 2019 அக்டோபரில் இது ஏறக்குறைய 500ஐ தொட்டது. சிகாகோ எனர்ஜி பாலிசி பிரிவின் ஆய்வு, வட இந்தியக் காற்று மாசால் அம்மக்களின் மொத்த ஆயுளில் ஏழு ஆண்டுகள் குறையும் என்கிறது.
விவசாயிகள் மீது பழி: டெல்லியில் காற்று மாசு என்றால் உடனே பஞ்சாப் உழவர்கள் மீது குற்றம் சுமத்தும் குரல்கள் எழும். அவர்கள் வயல்களில் வைக்கோலை எரிப்பதே காரணம் என்பர். ஆனால், அவ்வாறு வைக்கோலை எரிப்பது 12% மட்டுமே காரணம். அதுவும் ஆண்டுக்கு ஓரிரு மாதம் மட்டுமே நிகழ்கிறது என்கிறார் கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் சச்சிதானந்த் திரிபாதி. 60% மாசுக்கு டெல்லிக்குள் நிகழும் ஆலைகள், சூளைகள், போக்கு வரத்து, கட்டுமானக் கழிவுகள் உள்ளிட்ட செயல்களே காரணம் என்கிறார் அவர். பசுமைப் புரட்சிக்கு முன்பு தாங்கள் வைக்கோலைக் கொளுத்தியதில்லை என்கிறார்கள் பஞ்சாப் உழவர்கள். கால்நடைகளின் பயன்பாட்டைக் குறைத்த நவீன வேளாண்மை அறிஞர்கள் எஞ்சும் வைக்கோலைக் குறித்துத் தீர்வு எதனையும் யோசிக்கவில்லை. தற்போது தீர்வாக முன்வைக்கப்படும் இயந்திரமும் (Rota-feeder) பொருளாதாரரீதியில் போதுமான பலனளிக்கவில்லை என்பதால் வைக்கோலைக் கொளுத்துகிறோம் என்கிறார்கள் அவர்கள். வைக்கோலைக் கொளுத்துவது என்பது பஞ்சாபில் பல்லாண்டுகளாகவே நடைபெறும் நிலையில், தற்போது மட்டும் அது சிக்கலாக மாறியதற்குப் பின்னே ஓர் அரசியல் இருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
12 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
3 hours ago
வலைஞர் பக்கம்
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
இந்தியா
6 hours ago