பரபரப்பான பள்ளிச்சூழல். மதியம் மூன்று மணியளவில் பள்ளி மாணவர்கள் சார்...சார்.. என்ற அழைப்பின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு மாணவன் இரண்டு பறவை குஞ்சுகளைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தான். கேள்விக்குறியோடு அவனையும் அவன் கொண்டுவந்த பறவைக் குஞ்சுகளையும் பார்த்தேன். “கரண்டு கம்பத்தில இருந்த கூடு ஆடிக் காத்து வேகமாக வீசுனுதல பிஞ்சு தொங்கிச்சி சார், அதில இருந்த இந்த இரண்டு குஞ்சுகளும் கீழ விழுந்திடுச்சி சார்” என்றான். அவற்றைப் பார்ப்பதற்கு கருஞ்சிட்டுபோல் தோன்றின. சரி, குஞ்சுகளை அவற்றின் கூட்டிலேயே வைத்துவிடலாம் என்று நினைத்துக் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தேன்.
இரண்டு தெரு தள்ளியிருந்த மின் கம்பத்தில் ஒரு கூடு அடித்த காற்றில் சிதைந்து தொங்கிக்கொண்டிருந்தது. இரண்டு கைகளிலும் இருந்த பறவைக் குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதன் தாய்ப்பறவை எங்காவது தென்படுகிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். எதுவும் தென்படவில்லை. ஒருவேளை குஞ்சுகளுக்கு உணவு தேடிச் சென்றிருக்குமோ? அல்லது கூடு கலைந்து குஞ்சுகளைக் காணாமல் ஏமாற்றத்துடன் சென்றிருக்கிருக்குமோ என்று நினைத்துக்கொண்டே பள்ளி திரும்பினேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
41 secs ago
இந்தியா
40 mins ago
வர்த்தக உலகம்
48 mins ago
ஆன்மிகம்
6 mins ago
இந்தியா
16 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
2 hours ago