தேனின் சுவை குறித்த தன் லயிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கியங்களில், பலமொழிகளில், சொலவடைகளில் பதிவு செய்திருக்கிறது மனித இனம். அப்போது தேனீக்களுக்கு அழிவில்லை. ஆனால், இன்று அழிந்துவரும் பூச்சியினங்களில் ஒன்றாக மாறியிருப்பதால் தேனீக்களின் வாழ்க்கை குறித்துக் கவலைப்படத் தொடங்கியிருக்கிறோம். ஏனென்றால் தேனீக்கள் செய்யும் மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பல்கிப் பெருகுகின்றன. அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் போனால் மனித இனம் கடும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால்தான் விவசாயிகள் மனித சமூகத்தின் காவலர்களாக தேனீக்களைப் பார்க்கிறார்கள். ஆனால் என்ன செய்ய? கொடிய பூச்சிக்கொல்லி ரசாயனங்களை, விவசாயம், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில் பயன்படுத்தி வருவதால், தேனீக்கள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. அவற்றைக் காக்கவும் மீட்டெடுக்கவும் வேண்டிய காலத்தின் கட்டாயம் உருவாகியிருக்கிறது.
தேனீக்களால் மனிதன் பெற்றுக்கொண்டதும் கற்றுக்கொண்டதும் ஏராளம். கற்றுக்கொண்டவற்றில் ‘டீம் ஒர்க்’ என்கிற கூட்டுழைப்புச் செயலாற்றலையும் எதிர்கால வாழ்க்கைக்கானச் ‘சேமிப்பு’ என்கிற திட்டமிடலையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால், இயற்கையோடு எப்படி இயைந்து வாழ்வது என்கிற தேனீக்களின் தலைசிறந்த வாழ்வியலை கற்றுக்கொள்ளத் தவறிவிட்டோம். உலக தேனீக்கள் தினமான இன்று, அவற்றிடமிருந்து 20ஆம் நூற்றாண்டுக்குப் பின் நாம் பெற்றுக்கொண்டிருக்கும் இரண்டு நவீனத் தொழில்நுட்பங்களை இப்போது பார்ப்போம்!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
5 hours ago