வெறுப்பை நேசத்தால் வெல்வது எப்படி?

By முகமது ஹுசைன்

நம் மீது நமக்குஇருக்கும் பிணைப்பே, நமக்கு இருக்கும் உறவுகளில் மிகவும் முக்கியமானது. இந்த உறவின் தரமே நம் வாழ்க்கையின் தரத்தையும், மனத்தின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும். நம் மீது நாம் கொண்டிருக்கும் உறவும் பிணைப்பும் ஆரோக்கியமற்றதாக இருந்தால், அது நம் சுயமரியாதையைச் சீர்குலைக்கும்; மனத்தின் சமநிலையைப் பாதிக்கும்; மற்றவர்களுடனான உறவையும் ஆரோக்கியமற்ற நிலைக்கு இட்டுச் செல்லும். முக்கியமாக, எந்தச் சிறப்பான நிலைக்கும் நாம் தகுதியானவர்கள் இல்லையென்று நம்மை அது நம்பவைக்கும். இதனால், வாழ்வின் மேன்மைக்காக நாம் இதுவரை மேற்கொண்ட கடின போராட்டங்கள் / முயற்சி போன்றவை எல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதுபோல் நாமே சிறுமைப்படுத்திக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.

ஒரு வேலையைச் சிறப்பாக நிறைவேற்றினாலும், அதை நாமே மிகவும் மோசமாக விமர்சித்துக்கொள்வோம். சாத்தியமற்ற குறிக்கோள்களைச் சுயமாக நிர்ணயித்து, அதில் சறுக்கும்போது நாமே நம்மைக் கடுமையாகத் தாழ்த்திக்கொள்வோம். சுயபாதுகாப்பு என்பது சமூகத்தை வெறுக்கும் ஒன்று என்பதாகச் சுருக்கிக்கொள்வோம். உயரிய கொள்கைகளைக் கொண்டவர்கள் என நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு, அடிப்படை கடமையிலிருந்தும்வேலையிலிருந்தும் தப்பித்து ஓடும் நிலைக்குச் செல்வோம். இதனால் பாதிக்கப்பட்ட பின்னர், நமக்கு எந்த வேலையும் உத்வேகம் அளிக்காது. எந்த வேலையாக இருந்தாலும், அது எவ்வளவு ஆக்கப்பூர்வமானதாக இருந்தாலும், இதை ஏன் செய்ய வேண்டும், இதனால் நமக்கு எந்தப் பலனும் கிடைக்காது என நம்பத் தொடங்குவோம். நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் அவ்வாறே நம்பச் செய்ய முயல்வோம். அலுவலகத்தில் பணிபுரிந்தோம் என்றால், ஒட்டுமொத்த பணிச்சூழல் சீரழிவுக்கும் நாமே காரணமாக மாறுவோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்