சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

அக்.8: அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸா, ரஷ்ய பத்திரிகையாளர் திமித்ரி முராதஃப் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அக்.8: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஐசரி கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், இந்தச் சங்கத்தில் 15 ஆண்டுகள் துணைத் தலைவராக இருந்தார்.

அக்.9: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. இது, ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ என அழைக்கப்படும்.

அக்.10: 2022ஆம் ஆண்டில் பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ள காமன்வெல்த் ஹாக்கிப் போட்டியிலிருந்து விலகுவதாக ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்தது.

அக்.13: தமிழகத்தில் நவம்பர் 1 முதல்ஒன்பதாவதற்குக் கீழ் உள்ள வகுப்பு களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வாரத்தில் 7 நாட்களும் வழிபாட்டுத் தலங்களை திறக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

அக்.14: ‘டி23’ என்று பெயரிடப்பட்ட புலியை 23 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் உயிருடன் வனத்துறைப் பிடித்தது.

அக்.13: சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்திருந்தவர்களின் பட்டியலில் பீலேவின் (77 கோல்) சாதனையை இந்தியாவின் சுனில் சேத்ரி முறியடித்தார். 79 கோல் அடித்திருக்கும் சுனில் சேத்ரி 3ஆம் இடத்தில் உள்ளார்.

அக்.15: துபாயில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துக் கோப்பையை வென்றது. இது சென்னை அணி வெல்லும் 4-வது கோப்பை.

பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் (அக்.8), புகழ்பெற்ற மலையாள நடிகர் நெடுமுடி வேணு (அக்.11), பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் (அக்.12) ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்