சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

ஜூலை 16: நாட்டில் முதன் முறையாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உணவு தானிய ஏடிஎம் இயந்திரத்தை அந்த மாநில அரசு நிறுவியுள்ளது.

ஜூலை 17: கீழடியில் நடந்துவரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சுடுமண் பெண் பொம்மை, உறைகிணறு ஆகியவை கண்டறியப்பட்டன.

ஜூலை 18: திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நவீன ரக ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கி இந்தியக் கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் துப்பாக்கி தானாகவே இலக்கைத் தேடும் நுட்பம்கொண்டது.

ஜூலை 18: ஐந்து நட்சத்திர ஹோட்டல் வசதியுடன் கூடிய ரயில் நிலையத்தை குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

ஜூலை 19: ஆந்திரம், தெலங்கானா இடையேயான தண்ணீர் பிரச்சினையால் கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் குறுக்கே அணைகள் கட்டும் உரிமையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது.

ஜூலை 19: தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதன் முறையாக தசம எண்களில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

ஜூலை 20: தமிழ்நாட்டில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பில் 33 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

ஜூலை 21: சீனாவில் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரயில் அறிமுகமானது. மின்காந்த சக்தியில் இயங்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 23: உலக விளையாட்டுத் திருவிழாவான 32-வது ஒலிம்பிக், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. 206 நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 mins ago

தமிழகம்

49 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்