சென்னை போன்ற நகரங்களில் வீடு என்பது நடுத்தர மக்களைப் பொறுத்தமட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புதான். அதுவும் நகர நெருக்கடிக்கு இடையில் ஒரு சிறிய கூடு போல ஒரு வீடு. வீட்டு ஜன்னலுக்கு அருகிலேயே மற்றொரு வீடு, சுற்றுச் சுவர் கூட இல்லாமல் வீதியை நெருக்கிக் கட்டியிருக்கும் விதம் என இந்த வாழ்க்கைக்கு நாம் பழக்கப் பட்டுவிட்டோம்.
நம் பிள்ளைகளுக்கோ பால்கனியை விட்டால் விளையாட வேறு இடம் இல்லை. இந்த நிலைக்கு மாறாக விசாலமான வீதி, சுற்றிலும் இயற்கைச் சூழல், பிள்ளைகள் விளையாட மைதானம், வாரக் கடைசியில் கேளிக்கைக்கு ஒரு கூடம் என எல்லாம் அமைந்த ஒரு வீடு என்பது நம் ஒவ்வொருவருக்கும் கனவாக இருக்கும். அந்தக் கனவை நனவாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தர ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது கீரீன் ஹோம்ஸ் பார்ம்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம்.
வில்லா க்ரீன் என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR Road) கேளம்பாக்கத்தில் உருவாகிவருகிறது. 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் திட்டம் இடநெருக்கடியின்றி இயற்கைச் சூழலில் எழுந்துவருகிறது.
“40 ஏக்கர் பரப்பளவில் பொதுவாக இப்போது மற்ற நிறுவனமாக இருந்தால் கிட்டத்தட்ட 11 ஆயிரம் யூனிட்டுகளை உருவாக்கிவிடுவார்கள். நாங்கள் அதே 40 ஏக்கர் நிலப்பரப்பில் வெறும் 550 யூனிட்டுகளை மட்டும் உருவாக்கி இருக்கிறோம். மீதி இடங்களை ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்காகவே விட்டிருக்கிறோம்” என்கிறார் கீரீன் ஹோம்ஸ் பார்ம்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தேவதாசன்.
வில்லாக்கள், ரோ ஹவுஸ், ப்ளாட் ஆகிய மூன்று விதமான வீடுகள் இங்கு விற்பனைக்கு உள்ளன. விலையைப் பொறுத்தவரை 10 லட்சத்தில் இருந்து 1 கோடி வரை விற்பனைக்கு இருக்கின்றன. உங்கள் தேவைக்கும் பொருளாதார நிலைக்கும் தகுந்தாற்போல் உங்கள் கனவு இல்லத்தை நீங்கள் தேர்வுசெய்துகொள்ளலாம்.
இளைஞர்கள் விளையாடுவதற்கேற்ற கிரிக்கெட், டென்னிஸ் மைதானங்கள் அமையவுள்ளன. பெரியவர்களுக்காக கிளப் ஹவுஸ் திட்டத்தின் உள்ளேயே அமையவுள்ளது. இது மட்டுமல்லாது சர்வதேசத் தரத்திலான பள்ளி ஒன்றுக்கான இடத்தை இத்திட்டத்துடன் இணைத்தே உருவாக்கி இருக்கிறார்கள். உள்ளே எட்டுப் பூங்காக்கள் அமையவுள்ளன.
இதில் ஒன்றின் பரப்பளவு மட்டும் 7.5 ஏக்கர் ஆகும் என்கிறார் ஞானசேகர் தேவதாசன். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளான ஓ எம் ஆர் சாலையில் பொதுவாகத் தண்ணீர்ப் பிரச்சினை இருக்கும். அதாவது கிடைக்கும் நிலத்தடி நீரில் உப்புச் சுவை மிகுந்து இருக்கும். ஆனால் இந்த வில்லா க்ரீனில் நல்ல தண்ணீர் கிடைப்பதாகச் சொல்கிறார் ஞானசேகரன்.
மேலும் முழுக் குடியிருப்புத் திட்டத்துக்கும் கழிவு நீர் வெளியேற்றும் செயல் திட்டத்தை சென்னையின் பிரபலமான நிபுணர்களைக் கொண்டு நிர்மாணித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது சென்னையில் முதன் முறையாக மின்சார இணைப்புக்கான அண்டர்கிரவுண்ட் கேபிளிங் செய்திருக்கிறார்கள்.
தொடர்புக்கு: கீரீன் ஹோம்ஸ் பார்ம்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ்,
Ph: 044 42999555.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago