இல்லம் என்பது இன்பம் சேர்க்க வேண்டும். ஆடி ஓடி உழைத்துக் களைத்து நமக்கு உரிமையான இல்லத்துக்குத் திரும்பும்போது ஓய்வெடுக்கத் தோதுவான அறையும் அறைக்கலன்களும் இருந்தால் அதற்கு ஈடு இணையே இல்லை.
அந்த வகையில் சாய்வு நாற்காலிகளுக்கு எந்தச் சாதாரண அறையையும் அசாதாரண அழகாக்கும் வலிமையுண்டு. வரவேற்பறை, படுக்கையறை, படிக்கும் அறை என ஒவ்வொரு அறைக்கும் ஏற்றவாறு இந்தச் சாய்வு நாற்காலிகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
இப்போது நீங்கள் கட்டும் வில்லா அல்லது வாங்கும் அப்பார்ட்மெண்ட் போன்ற நவீன வீடுகளுக்கு ஏற்ற நவீன சாய்வு நாற்காலிகள் சந்தையில் புதிதாக அறிமுகமாகியிருக்கின்றன.
உங்கள் வீட்டில் எந்தவொரு இடத்தையும் அழகானதாகவும் வசதியானதாகவும் மாற்றும் திறன் இந்த நவீன சாய்வு நாற்காலிகளுக்கு உண்டு. இந்தச் சாய்வு நாற்காலிகள் வீட்டை மிகச் சிறந்த முறையில் அலங்கரிக்கின்றன. அதோடு, சொகுசாக ஓய்வெடுக்கவும் உதவுகின்றன. இவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கான சில ஆலோசனைகள்:
வசதியாகப் படிக்க...
புத்தகப் பிரியர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் இப்போது புதுமையான சாய்வு நாற்காலிகள் கிடைக்கின்றன. இந்த நாற்காலிகளை வரவேற்பறையிலும் வைக்கலாம்.
முட்டை நாற்காலிகள்
இந்த முட்டைவடிவ நாற்காலிகளையும் அர்னி ஜேக்கப்சென்தான் முதலில் வடிவமைத்தார். பெரிய வரவேற்பறைக்கு ஏற்றது. உங்கள் வரவேற்பறையைக் கூடுதல் நவீனமாக்குவதற்கு இவை உதவும்.
எப்படியோ விதவிதமான நாற்காலிகள் சந்தையில் புழக்கத்துக்கு வந்துவிட்டன. வசதியான வீட்டை வாங்கிக்கொண்ட நீங்கள் விலா நோக உழைத்து வரும்போது உங்களை ஆதரவுடன் எதிர்கொள்ளும் வில்லாவில் வசதியான நாற்காலிகளையும் வாங்கிப் போட்டால் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் அல்லவா?
குட்டித் தூக்கம் போட..
பரபரப்பான வேலைகளுக்குப் பிறகு வார இறுதியில் வீட்டில் குட்டித் தூக்கம் போடுவதற்கு இந்த நாற்காலி பயன்படும்.
வண்ணமயமாகும் ஓய்வு
உங்களுக்குப் பிடித்த நிறத்தில், பிடித்த வடிவில் இந்த நாற்காலியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வண்ணங்களின் ரசிகர்களுக்கு ஏற்றது.
அன்னப் பறவை நாற்காலிகள்
1958-ல் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அர்னி ஜேக்கப்சென் வடிவமைப்பாளர் என்னும் இந்த அன்னப் பறவை நாற்காலிகளை கோபென்ஹேகனில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்காக வடிவமைத்தார்.
இப்போதும் இந்த நாற்காலி நவீனத்துக்கு அடையாளமாக விளங்குகிறது. பெரிய வசதியான நாற்காலிகளை வாங்க விரும்பினால் இந்த அன்னப்பறவை நாற்காலிகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
கால்களும் ஓய்வெடுக்கட்டும்!
இந்தச் சாய்வு நாற்காலிகள் கால்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நிற்க நேரமில்லாமல் வேலைக்காக ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு வீட்டில் ஓய்வெடுக்க இந்த நாற்காலி உதவிசெய்யும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
37 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago