தைமாத மேகம் ஊரெங்கும் வெண்பஞ்சாகப் படர்ந்திருந்தது. பேசும்போது எல்லாருடைய வாயிலிருந்தும் ஆவியாகப் புகை வந்துகொண்டிருந்தது. சுள்ளென்று வெயில் அடித்தாலும் யாருக்கும் உறைக்கவில்லை. இந்தப் பனிக்கு ஒருவேளை சட்டென்று தூறல் வந்துவிடுமோ என்று விவசாயிகள் பயந்துகொண்டிருந்தார்கள். ஏனென்றால், களத்தில் கருதுகள் அடிப்பதற்காகக் காய்ந்துகொண்டிருந்தன. கருது அறுத்த தட்டைகள் படப்பு ஏறுவதற்காகப் பிஞ்சையில் வரிசையிட்டுக் கொடிபோட்டுக் கட்டுவதற்காகத் தயாராக இருந்தன. பெளர்ணமிக்காக வளர்ந்துவரும் நிலா மேகங்களினூடே கலைந்து கலைந்து அவ்வப்போது வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது.
பாதமுத்துவிற்குத் தூக்கம் பிடிக்க வில்லை. நாளைக்குச் சோளம் விதைக்க வேண்டும். புருசன் உழுது கொண்டுபோனால் இவள் விதை போட்டுக்கொண்டே போக வேண்டும். ஒருவேளை மழை வந்து தட்டை நனைந்துவிட்டால் உழவு மாடுகளுக்கான ஒரு வருஷ இரை பாழாப்போகுமே என்று நினைத்து நினைத்துப் படுக்கையில் புரண்டுகொண்டு கிடந்தாள். ஆனாலும் படுக்கை கொள்ளவில்லை. புருசன் தூங்கட்டும், நாம் போய் தட்டையைக் கட்டிக்கொண்டு வந்து வீடு சேர்த்துவிடுவோம் என்று எழுந்து பிஞ்சைக்கு வந்துவிட்டாள். வந்தவள் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு ஓடி ஓடி தட்டையைக் கட்ட ஆரம்பித்துவிட்டாள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
8 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
6 mins ago
சினிமா
24 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
18 mins ago
சினிமா
29 mins ago
சினிமா
32 mins ago
வலைஞர் பக்கம்
36 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
46 mins ago