கதை: பச்சை நிழல்

By உதயசங்கர்

பேருந்து வந்து நின்ற அந்த மைதானம் வெயிலில் தகதகவென மின்னிக்கொண்டிருந்தது. சோலையூரில் வந்து இறங்கியதும் சுற்றும்முற்றும் பார்த்தார் சோமு. கானல் நீர் நதி மாதிரி ஓடிக்கொண்டிருந்தது. கோடைக்காலத்தின் உச்சம். வெள்ளை வெளேர் என்று வெயில் அடித்தது. ஒரு மரம்கூட இல்லை. பேருந்து நிலையம் பொட்டலாக இருந்தது. ஒதுங்கக்கூட நிழல் இல்லை. சொந்த ஊரான சோலையூரைவிட்டு அவர் சென்று முப்பது வருடங்களாகி விட்டன. கல்வி, வேலை என்று அவர் நகரத்துக்குச் சென்று இவ்வளவு காலம் வாழ்ந்தார். திடீரென்று சொந்த ஊர் நினைவு வந்துவிட்டது. ஒரு தடவையாவது போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தார்.

இப்போது சோலையூர் ‘பாலையூர்’ ஆகக் காட்சி அளித்தது. அதிர்ச்சி அடைந்தார். அவர் சிறுவனாக இருந்தபோது சோலையூரில் எங்கு பார்த்தாலும் மரங்கள் நிறைந்த சோலைகள் இருக்கும். குளிர்ந்த காற்று எப்போதும் வீசும். பறவைகளின் கீச்சு ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். வண்ணத்துப்பூச்சிகளும் தட்டான்களும் காற்றில் அங்குமிங்கும் அலைந்து திரியும். அவரும் அவருடைய நண்பர்களும் அந்த மரங்களின் நிழலில் மண்ணா மரமா, எறிபந்து, சில்லாங்குச்சி, கோலி, பம்பரம், செதுக்கு முத்து, கண்ணாமூச்சி, தொட்டுப்பிடிச்சி போன்று பல விளையாட்டுகளையும் விளையாடி இருக்கிறார்கள். ஆனால், இப்போது எந்தச் சத்தமும் இல்லை. வானத்தில் ஒரு பறவைகூடப் பறக்கவில்லை. காற்றில் ஒரு வண்ணத்துப்பூச்சிகூட அலையவில்லை. ஆள் நடமாட்டமே இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

45 mins ago

சினிமா

46 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்