* பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் தலைவரும் பிரதமருமான க்ளெமென்ட் அட்லீதான் இந்தியாவுக்குச் சுதந்திரத்தை வழங்கினார்.
* ஆகஸ்ட் 15 அன்று அச்சு நாடுகளைச் சேர்ந்த ஜப்பான், நேச நாடுகளிடம் சரணடைந்ததை நினைவுகூரும் விதத்தில் மவுண்ட் பேட்டன் இந்த நாளில் சுதந்திரத்தை அறிவித்தார்.
* கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி நகரில் உள்ள கர்நாடகா காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம்தான் இந்திய தேசியக் கொடியைத் தயாரித்து நாடு முழுவதும் வழங்குகிறது.
* முதல் சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. 1911-ம் ஆண்டு தாகூர் எழுதிய ‘ஜனகணமன’ பாடல், 1950-ம் ஆண்டுதான் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது.
* தேசிய கீதத்தை 52 நொடிகளில் பாடிவிடலாம். ஒரு நிமிடத்துக்கு மேல் பாடக் கூடாது.
* இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அந்தக் கொண்டாட்டத்தில் மகாத்மா காந்தி கலந்துகொள்ளவில்லை. இந்தியப் பிரிவினையால் வங்கத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தடுப்பதற்காக, உண்ணாவிரதம் இருந்தார் காந்தி.
* இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கோவா போர்த்துகீசியப் பகுதியாக இருந்தது. 1961-ம் ஆண்டுதான் இந்தியாவுடன் இணைந்தது.
* இந்தியா, பஹ்ரைன், வட கொரியா, லீக்கின்ஸ்டைன், தென் கொரியா ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 mins ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago