பறவை விடுகதைகள்

By செய்திப்பிரிவு

அர. செல்வமணி

1. மாலைக் கதிரோன் மங்கியதும்

மறைவில் இருந்து வெளியேறும்

வேலை இரவு முழுவதுமே

விடிந்தால் மீண்டும் மறைந்துவிடும்

உலவி இரவில் எலி பிடித்தே

உழவர்க் குதவும் பறவையது - அது என்ன?

2. ஆவின் மேலே அமர்ந்திருக்கும்

அழகாய் எங்கும் சுற்றிவரும்

தாவிப் பூச்சி பிடித்துண்ணத்

தக்க பொழுதைப் பார்த்திருக்கும்

மேவும் கறுப்பு வண்ணந்தான்

மேனி வெயிலில் மின்னுந்தான்

கவையைப் போன்ற வால்நுனியாம்- அது என்ன?

3. டக்டக் டக்டக் டக்கென்றே

தட்டும் ஒலியும் கேட்கிறதா

எட்டிப் பார்த்தால் மரத்தினிலே

இருப்பேன் பூச்சி பிடிப்பதற்கே

கொட்டும் அலகோ உளிபோலே

கூராய் வலிமை மிக்கதுவே - அது என்ன?

4. வெண்மை நிறத்தில் வயிறிருக்கும்

மேலே கறுப்பு நிறமிருக்கும்

வண்ணம் இரண்டும் சேர்ந்தொன்றாய்

வடிவைக் கூட்டும் மிக நன்றாய்

கொண்டேன் நுனிவால் கவைபோலே - அது என்ன?

5. மணமாம் மலரின் பெயரதனை

வடிவாம் புள்ளும் பெற்றதுவே

கண்கள் சிவப்பு நிறமிருக்கும்

கருத்த உடலே கொண்டிருக்கும்

வண்ணச் சிவப்பு இறகுகளாம்

வாலோ சற்று நீண்டதுவாம் -அது என்ன?

விடைகள்: 1. ஆந்தை 2. உண்ணிக் கொக்கு 3. மரங்கொத்தி
4. வெள்ளை வயிறு கரிச்சான் 5. செண்பகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்