என். சொக்கன்
அது ஓர் அழகிய காடு. அதன் நடுவில் ஒரு குளம் வட்ட வடிவில் இருந்தது, அதன் மையத்தில் வாத்துகள் வசித்தன.
வாத்துகளுக்குத் தண்ணீர்தான் உலகம். எந்த நேரமும் அங்கேயே மகிழ்ச்சியாகச் சுற்றித்திரிந்தன. அவற்றுள் ஒரு வாத்துக்குஞ்சுக்கு மட்டும் தரைக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை. ‘‘என்னைத் தரைக்குக் கூட்டிகிட்டுப் போங்கம்மா” என்று தாயிடம் கேட்டது.
‘‘அச்சச்சோ! தரைக்கு மட்டும் கூட்டிகிட்டுப் போகச் சொல்லாதே. நமக்கு இந்தக் குளம்தான் பாதுகாப்பு.”
‘‘ஒரே ஒருதடவை அந்தத் தரையைத் தொட்டுப் பார்த்துட்டு வந்தால் என்ன?”
‘‘குளத்தோட கரையில நரி இருக்கு, அதுக்கு நீந்தத் தெரியாது, அதனால, அது இங்கே வராது, ஆனா, நாம அங்கே போனா அந்த நரி நம்மைச் சாப்பிட்டுடும்” என்றது தாய் வாத்து.
ஆவலுடன் கரையைப் பார்த்த வாத்துக்குஞ்சு, நரியைக் கண்டு நடுங்கியது.
மறு நிமிடம், ‘‘அம்மா, நரி இந்தப் பக்கம்தானே இருக்கு. நாம வேற பக்கமா நீந்திப் போய்த் தரையைத் தொட்டுப் பார்த்துட்டுத் திரும்பி வந்துடலாமே?”
‘‘அந்த நரி நம்மைவிட நாலு மடங்கு வேகமா ஓடும். அதனால, நீ இந்தப் பக்கமா நீந்திப் போய்த் தரையைத் தொடறதுக்குள்ள, அது அங்கே ஓடி வந்து உன்னைப் பிடிச்சுடும்.”
‘‘நான் இந்தப் பக்கமா நீந்தற மாதிரி போக்குக் காட்டிட்டு வேற பக்கமா நீந்திப் போனா?’’
‘‘நரி என்ன முட்டாளா? அதுவும் அந்தப் பக்கமா ஓடி வந்து உன்னைப் பிடிச்சுடும்.”
இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு முதிய வாத்து அந்த வாத்துக்குஞ்சை அழைத்தது. ‘‘நானும் சின்ன வயசுல உன்னை மாதிரிதான், ஒரே ஒரு தடவையாவது கரைக்குப் போகணும்னு ஆசைப்பட்டேன். ஒரு தந்திரத்தைப் பின்பற்றி அந்த நரியை ஏமாத்திட்டேன். கரையைத் தொட்டுப் பார்த்துட்டு வந்துட்டேன். உனக்கும் சொல்லித் தர்றேன்” என்றது.
வாத்துக்குஞ்சால் பாதுகாப்பாகத் தரையைத் தொட்டுவிட்டுத் திரும்ப இயலுமா? கணக்கிட்டுப் பாருங்களேன்!
விடை: * வட்டக் குளத்தின் ஆரத்தை ‘r’ என்று வைப்போம்; வாத்துக்குஞ்சு அதன் மையத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்வோம் |
(அடுத்த வாரம், இன்னொரு புதிர்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nchokkan@gmail.com
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
10 mins ago
சினிமா
13 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
11 mins ago
சினிமா
29 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
23 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
37 mins ago
வலைஞர் பக்கம்
41 mins ago
சினிமா
46 mins ago