அண்மையில் பிரேசில் நாட்டின் கேக்சியாஸ் டோசுல் நகரில் நடைபெற்று முடிந்த செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகளில் 17 பதக்கங்களை வென்று நாடு திரும்பியிருக்கிறார்கள் இந்திய வீரர்கள். இதில் சென்னை அடையாறைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர் மட்டும் மூன்று பதக்கங்களை வென்று புதிய சாதனையுடன் நாடு திரும்பியிருக்கிறார்.
டெஃப்லிம்பிக்ஸில் பிரித்வி சேகர் டென்னிஸ் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என மூன்று பிரிவுகளில் பங்கேற்றார். ஆடவர் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் கலப்பு இரட்டையர் போட்டியில் ஜஃப்ரீன் ஷேக்குடன் இணைந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்ற பிரித்வி சேகர், ஆடவர் இரட்டையர் பிரிவில் தனஞ்சய் துபேவுடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் டென்னிஸில் ஒரு பதக்கம் வென்றிருந்த பிரித்வி சேகர், இந்த முறை மூன்று பதக்கங்களை வென்றதன் மூலம் தன்னுடைய டென்னிஸ் பயணத்தில் அழுத்தமான தடத்தைப் பதித்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago