மகிழ்ச்சியூட்டுவதுடன் நின்றுவிடாமல், மனித நேயம், தன்னம்பிக்கை, அறம் ஆகியவற்றை மறைமுகமாக ரசிக மனங்களுக்குள் கடத்தும் திரைப்படங்கள் எல்லாக் காலத்திலும் கொண்டாடப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களில் அதிகமும் பங்கேற்க விரும்பும் சூர்யாவுக்கு, ‘சூரரைப் போற்று’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தில் சூர்யா நடிப்பில் தொட்ட உச்சத்தை முந்திச் செல்லும் பல படங்களை காலம் அவருக்கு வழங்கலாம். ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட உரிமைகள் கிடைக்க உந்துசக்தியாக இருந்த ‘ஜெய் பீம்’ போன்ற படங் களையும் அவர் தயாரித்து, நடிக்கலாம். ஏனென்றால், ஒரு வெற்றிகரமான நடிகராக, பணம், புகழ் ஆகியவற்றை ஈட்டியபின் அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடுவதிலேயே தேங்கிப் போய்விடுபவர்களுக்கு மத்தியில், சூர்யா சமூகத்தின் கலைஞனாக தன்னை உணர்ந்தவர்.
தனது அப்பா 39 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய சிவகுமார் கல்வி அறக்கட்டளையை தத்தெடுத்துகொண்டு, தன் பங்குக்கு அகரம் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளையைத் தொடங்கி, கடந்த 18 ஆண்டுகளாக ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தேர்ந் தெடுத்து அவர்களது முழுமையான கல்விச் செலவை ஏற்று வருகிறார். கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன்களுக்கு எதிரான அரசுக் கொள்கை களையும் அவர் விமர்சனம் செய்யத் தயங்கியதில்லை. இன்னொரு பக்கம், சமூக விழிப்புணர்வுக்காக தன்னுடைய நட்சத்திரப் புகழைப் பயன்படுத்துவதில் ஒரு தன்னார்வலராக தொடக்கம் முதலே முன்னோடியாக நிற்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
19 mins ago
சினிமா
26 mins ago
விளையாட்டு
49 mins ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
கல்வி
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago