இணைந்த ஜோடி
கிட்டத்தட்ட அனைத்து விமர்ச கர்களுமே சல்மான் கானின் ‘தபாங் 3’ படத்தை வறுத்து எடுத்தார்கள். விமர்சனங்களை யெல்லாம் தாண்டி ரூபாய் 200 கோடி வசூலைக் குவித்தது அந்தப் படம். சல்மானின் தோல்விப் படங்களும் கூட ரூ.100 கோடிக்குக் குறைவாக வசூல் செய்ததில்லை.தற்போது ‘தபங் 3' இயக்கிய பிரபுதேவாவின் இயக்கத்தில் ‘ராதே' என்ற படத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான். இந்தப் படம் இந்த வருடம் ரம்ஜானுக்கு வெளியாகிறது. இதில் கோலிவுட் நடிகர் பரத்தும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திஷா படானி நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை அடுத்து, ஃபர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் நடிக்க இருக்கும் தனது 2021-ம் ஆண்டுக்கான படத்தையும் அறிவித்துவிட்டார் சல்மான்.
பிரிந்தவர் இணைந்தனர்!
தெலுங்குத் திரையில் மிகப் பிரபலமான, வெற்றிகரமான திரைப்படமாக வலம் வந்தவர்கள் சிரஞ்சீவியும் விஜயசாந்தியும். இவர்கள் இருவரும் தீவிர அரசியலில் இறங்கியபிறகு நடிப்பை விட்டுவிட்டனர். எதிரெதிர் முகாம்களில் இயங்கியதால் நட்பு ரீதியாகப் பிரிந்தனர். ‘தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் இணைந்துவிட்டோம்’ என விஜயசாந்தி தெரிவித்திருக்கிறார். மகேஷ்பாபு நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் ‘சரிலேரு நீக்கெவரு’ படத்தில் பல வருட இடைவெளிக்குப்பின் நடித்திருக்கிறார் விஜயசாந்தி. அந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார் சிரஞ்சீவியும் விஜயசாந்தியும் சந்தித்து மனம் விட்டுப் பேசிக்கொள்ள, பகை மறந்து நட்பைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மறு வரவு
தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நவ்யா நாயர். சந்தோஷ் மேனனைத் திருமணம் செய்துகொண்டபின் திரை நடிப்பிலிருந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக விலகியிருந்தார். தற்போது பெண் மையப் படங்கள் மலையாளத்திலும் அதிகரித்து வருவதால் நவ்யாவுக்கும் மறு வரவுக்கான வாய்ப்பு அமைந்துவிட்டது. வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் ‘ஒருத்தி’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.
- ரசிகா
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
43 mins ago
இந்தியா
52 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago