இணையத்தைக் கலக்கிய ‘ஒரு அடார் லவ்’ படத்தின் இயக்குநர் ஒமர்லுலு அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார். அதில் முன்னணி நடிகரான முகேஷ், 90-களில் குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த ‘சக்திமான்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘தமாகா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ‘ஒலிம்பியன் அந்தோணி ஆதம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். ஊர்வசி, நிக்கி கல்ராணி, தர்மஜன் போல்காட்டி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
மலையாள ஜல்லிக்கட்டு
‘அங்காமாலி டைரீஸ்’ மூலம் பெரும் கவனம் பெற்ற லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, ‘ஜல்லிக்கட்டு’ என்ற புதிய படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதற்கும் நம்மூர் ஜல்லிக்கட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. வளர்க்கப்படும் எருமை ஒன்று, அது வெட்டப்படுவதற்கு முந்தைய நாள் அங்கிருந்து தப்பிவிடுகிறது. கதைக் களம் காடுகள் நிறைந்த இடுக்கிக்கு அருகிலுள்ள கட்டப்பனை. அதைப் பிடிப்பதற்கான முயற்சிதான் படம். ஆனால் இதன் வழியாக மனிதர்களைத்தான் சித்தரித்திருப்பதாகச் சொல்கிறார் லிஜோ. ‘மீச’ நாவலின் மூலம் பிரபலமான எழுத்தாளர் எஸ்.ஹரீஷின் ‘மாவோயிஸ்ட்’ என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், டோரண்டோ சர்வதேசத் திரைவிழாவில் சமகாலத் திரைப்படங்கள் பிரிவில் திரையிடப்படவுள்ளது.
இமாச்சலில் மஞ்சு வாரியர்
‘ஒழிவு திவசத்த களி’, ‘செக்சி துர்கா’ ஆகிய படங்களை இயக்குநர் சனல் குமார் சசிதரனின் புதிய படத்தில் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துவருகிறார். ‘கயட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இமாச்சலப்பிரதேசத்தில் நடந்துவந்தது. அங்கு திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் பாதை துண்டிக்கப்பட்டு படக்குழுவினர் மலைப் பகுதிகளில் சிக்கிக்கொண்டனர். மாநில அரசின் மீட்புக் குழுவினரின் உதவியால் மஞ்சுவாரியர் உட்பட படக் குழுவினர் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இயக்குநர் சனல் குமார் சசிதரன் தனது குழுவுடனான ஒளிப்படத்தை, ‘எல்லாவரும் ஸூரக்ஷிதரானு; சினிமயும்’ (எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்; சினிமாவும்) எனத் தலைப்பிட்டுத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மலையாளத்தில் பிரசன்னா
மலையாள இளம் சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் இந்த ஓணத்துக்கு வெளியாகவுள்ள படம் ‘பிரதர்ஸ் டே’. இந்தப் படத்தின் மூலம் நடிகர் பிரசன்னா மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார். ஏற்கெனவே மலையாள மொழிமாற்றுப் படமான ‘கஸ்தூரிமான்’ மூலம் கேரளத்தில் அறியப்பட்டவர் பிரசன்னா. இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் கலாபவன் சஜோன் இயக்கியிருக்கும் இதில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மடோனா செபஸ்டின், மியா ஜார்ஜ், ப்ரயகா மார்டின் ஆகிய நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். படம் வரும் ஓணம் பண்டிகை வெளியீடாக வருகிறது.
தொகுப்பு: விபின்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago