புயல்
ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களைப் புரட்டிப்போட்ட ‘ஹுத் ஹுத்' புயல் தெலுங்கு திரையுலகினரை ஒன்றிணைத்தது. பண உதவி மட்டுமன்றிப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் வசூலித்துக் கொடுத்தனர் தெலுங்குத் திரையுலகினர். ‘இந்தத் தீபாவளிப் பண்டிகையை இவர்களோடு கொண்டாடுங்கள்; விசாகப்பட்டினத்ததிற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது' என யூடியூபில் வலம் வரும் சிறிய வீடியோ பதிவு மூலம் வலியுறுத்தியுள்ளார் பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. ராஜீவ் மேனன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
‘கத்தி' முன்னோட்டம்
அக்டோபர் 19-ம் தேதி கத்தி முன்னோட்டம் வெளியாகும் என்று அறிவித்திருந்ததால், டிவிட்டரில் முன்னோட்டம் எப்படியிருக்கும் என்று விவாதங்கள் சூடுபிடித்தன.
பிறகு மாலை 6 மணிக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்னோட்டத்தைத் தனது டிவிட்டரில் பகிர்ந்தார். இது இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரால் ரீ-ட்வீட் செய்யப்பட்டது. தனுஷ், சிபிராஜ், தயாநிதி அழகிரி உள்ளிட்ட பலரும் ‘கத்தி' குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து விட்ட ‘கத்தி’ முன்னோட்டத்தில் விஜய் பேசும் வசனங்களும் பின்னணி இசையும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
19 ஆண்டுகள்
கடந்த 1995-ம் ஆண்டு அக்டோபர் 19-ல் வெளியான ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே' திரைப்படம், மும்பை மாராட்டா மந்திர் திரையரங்கில் கடந்த 19 ஆண்டுகளாக திரையிடப்பட்டுவருகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் இந்திய அளவில் #19EvergreenYearsOfDDLJ என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. பலரும் அந்தப் படத்தைப் பற்றிய தங்கள அனுபவங்களை இந்த ஹேஷ்டேக்கில் டிவிட்டர்வாசிகள் பகிர்ந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
வலைஞர் பக்கம்
20 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
26 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago