மும்பை கேட்: கணிதவியல் காதலி!

By கனி

கணிதவியல் காதலி!

பாலிவுட்டில் ராதிகா ஆப்தே அடியெடுத்துவைத்து பதினான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. நாடகம், தொலைக்காட்சி, படங்கள், இணையத் தொடர்கள் என அனைத்துத் தளங்களிலும் அவர் தன் நடிப்புத் திறமையை நிரூபித்திருக்கிறார். ஆனால், தொடக்கத்தில் தான் ஒரு நடிகையாக வேண்டுமென்று யோசிக்கவில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார்.

“எனக்கு எப்போதும் கணிதம் மிகவும் பிடித்த பாடமாக இருந்திருக்கிறது. என் பட்டப் படிப்பையும் அதில்தான் முடித்தேன். அதனால், கணிதத்தில்தான் ஏதாவது செய்வேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

அதற்குப் பிறகு, காட்டுயிர்களைப் பற்றி ஏதாவது செய்ய நினைத்தேன். ஆனால், யாருக்குத் தெரியும்? தற்போது, திரைப்படத்துறையில் இருக்கிறேன். அது மகிழ்ச்சியளிக்கிறது” என்று சொல்லியிருக்கிறார் ராதிகா.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி மொழித் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில், ‘ராத் அகேலி ஹை’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

நடிப்பு, பொழுதுபோக்க அல்ல!

2018-ம் ஆண்டில் ‘பரி’, ‘சுயீ தாகா’, ‘ஜீரோ’ என மூன்று படங்களில் நடித்திருந்தார் அனுஷ்கா ஷர்மா. இம்மூன்று படங்களும் வெற்றிபெறவில்லையென்றாலும் ஒரு தயாரிப்பாளராக அனுஷ்கா பாராட்டப்பட்டார். “கடந்த மூன்று ஆண்டுகளில் சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன்.

நான் தேர்ந்தெடுத்து நடித்த அனைத்துக்குமே கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. தற்போது, என் திரை வாழ்க்கையில் நேரத்தை ஓட்டுவதற்காகப் படங்களில் நடிக்க வேண்டிய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக நினைக்கிறேன்.

நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு பணிகளையும் நிறைவோடும் சுவாரசியமாகவும் செய்துவருவதாக உணர்கிறேன்” என்று தன் திரைப் பயணம் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அனுஷ்கா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்