பக்தர்களின் இன்னல்களைத் தீர்க்கும் கோவிந்தாஜி கோயில்

By ராஜி ராதா

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணர். அவரை கோவிந்தன் எனவும் அழைப்பர். புரியில் கிருஷ்ணரே ஜகந்நாதர். இவற்றின் கலவைதான் மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள ஸ்ரீ கோவிந்தாஜி ஆலயம். நகரத்தின் மிகப் பெரிய கோயிலாக இருப்பது இதுதான். ராஜாவின் அரண்மனைக்கு அருகிலேயே இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோவிந்தாஜி கோயில் இங்கு உருவான வரலாற்றைச் சுருக்கமாக அறிந்து கொள்வோம். பாக்ய சந்திரா தர்த்தா (பொ.ஆ. (கி.பி) 1763-98) சிறந்த கிருஷ்ண பக்தர். இவர் இம்பால் நகரிலிருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ள கெய்னாவில் தங்கியிருந்தபோது, அவரது கனவில் கிருஷ்ணர் தோன்றித் தனக்கும் ராதாவுக்கும் பலாமரத்தில் சிலை செய்து வழிபட வேண்டும் எனக் கூறி மறைந்துவிட்டார்.

இதன்படி பொ.ஆ.1776இல் இவர், கிருஷ்ணன் விருப்பப்படியே பலாமரத்தில் கிருஷ்ணன், ராதா திருவுருக்களைச் செய்து, தன்னுடைய அரண்மனையில் வைத்து வழிபட்டு வந்தார். அந்தக் காலத்தில் இங்கு ராச லீலைகள், நாட்டிய நாடகங் கள் நடந்ததற்கான ஆதாரம் உள்ளது. மகாராஜா நாராசிங், 1846இல் இந்தச் சிலைகளை அரண்மனையிலிருந்து எடுத்து அரண்மனைக்கு அடுத்து ஒரு கோயில் எழுப்பி அதில் பிரதிஷ்டை செய்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

43 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்