வார ராசிபலன்கள் 20-02-2020 முதல் 26-02-2020 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By செய்திப்பிரிவு

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் ராசிநாதன் செவ்வாய் கூட்டணியுடன் சஞ்சரிக்கிறார். புத்திக் கூர்மையுடன் செயல்களைச் செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். சுபச்செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் அகன்று ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் அகலும். வியாபாரம் தொடர்பான சுபச்செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பெண்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி பெறும். அரசியல்வாதிகளுக்கு, லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: திருத்தணி முருகனை அர்ச்சனை செய்ய வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் உச்ச நிலையில் சஞ்சரிக்கிறார். எந்த விஷயத்திலும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ராசியாதிபதி சுக்கிரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு, புதிய நட்பும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். கலைத் துறையினருக்கு, பணவரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு, பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 2, 6, 9.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவகிரகத்தில் சுக்கிரனுக்குத் தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதைச் செய்ய முற்படுவீர்கள். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ராசிக்கு 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் செவ்வாய் பார்வை பெற்று இருப்பதாலும் குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். வேலை பற்றிய கவலை நீங்கும். பெண்களுக்கு, எடுத்த காரியத்தைச் செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். கலைத் துறையினருக்கு, திட்டமிட்டுச் செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு, நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு, எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனத்தில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: வடக்கு, மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சினைகள் தீரும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் தனது சஞ்சாரத்தின் மூலம் அனுகூலத்தையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரப்போகிறார். செவ்வாயின் அருட்பார்வையால் சொத்து சம்பந்தமான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பணவரத்து திருப்தி தரும். கணவன், மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். பெண்களுக்கு, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் எதையும் புத்திசாதுரியத்தைப் பயன்படுத்திச் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, வாக்குவன்மையும் ஆதாயமும் ஏற்படும். மாணவர்களுக்கு, ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 6, 9.
பரிகாரம்: சரஸ்வதி தேவியைப் பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன், புதன், குரு ஆகியோர் ராசியைப் பார்ப்பதால் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு, மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். கலைத்துறையினர் பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியைப் பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனத்துடன் பாடங்களைப் படித்து வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனத்தில் தைரியம் பிறக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். அவர் மறைந்திருந்தாலும் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலத்தைக் கொடுக்கும். புத்தி சாதுர்யத்தைப் பயன்படுத்தி காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். வாழ்க்கைத் துணை உங்களுக்குப் பல விதத்திலும் உதவுவார். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். பெண்களுக்கு, உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டைகள் போட்டவர்கள் விலகி விடுவார்கள். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ய்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் கடன் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். மாணவர்களுக்கு, பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, வெள்ளை.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனத்தில் தைரியம் உண்டாகும். எதிலும் வெற்றி உண்டாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்